Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செப்.18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்?

செப்.18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்?
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (10:08 IST)
செப்டம்பர் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டு வர பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  
 
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அனைத்து மாநிலங்களுக்கும்  சட்டமன்றத் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடவடிக்கைக்காக பாஜக திட்டமிட்டு வருவதாகவும் இதற்காக முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்க உள்ள நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல்  திட்டத்திற்கான  மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டுவர I.N.D.I.A கூட்டணி முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்து நாளை ஆலோசனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆண்டு காலமாக வடை சுடுகிறது பா.ஜ.க! – முதல்வர் மு.க.ஸ்டாலின் Speaking4India Podcast!