Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தின் விலை குறைய தொடங்குகிறதா??

Arun Prasath
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:02 IST)
வெங்காய ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் அதன் விலை குறைய தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால், வெங்காயத்தின் விலை உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளால் அதன் விலை குறைய தொடங்கி விட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதும், அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கும், நல்ல பலன் தர தொடங்கியுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசு, தற்போது 25 ஆயிரம், டன் வெங்காயம் கையிருப்பு இருப்பதாகவும், அதனை கொண்டு விலையை கட்டுக்குள் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தில் கிலோவிற்கு 10 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments