Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்கு ஆறு நாட்கள் தான் உள்ளது - பள்ளி தலைமை ஆசிரியரின் பலே அறிவுத்திறன்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (15:18 IST)
படிப்பறிவில்லாதோருக்கு கூட வாரத்திற்கு 7 நாட்கள் உள்ளது என்று தெரியும் நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் வாரத்திற்கு 6 நாட்கள் என மாணவர்களுக்கு பாடம் கற்பித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் கன்சாபெல் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஸ் குமார் சூர்யவன்ஷி. இவர் பள்ளிக்கு பெரும்பாலான நாட்கள் குடித்துவிட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பதில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் வெகுநாளாக குற்றம் சாட்டி வந்தனர்.
 
இந்நிலையில் ராஜேஸ் குமார் சூர்யவன்ஷி வாரத்தின் நாட்கள் குறித்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது வாரத்தில் 6 நாட்கள் தான் உள்ளது என்றும், ஆங்கில வார்த்தையை பிழையோடு எழுதியும் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். இதனை வீடியோவாக எடுத்த ஒருவர் அதனை சமூக வலைத்தளத்தில் பரவவிட்டார். 
 
இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி ராஜேஸ் குமாரை சஸ்பெண்ட் செய்துள்ளார், மேலும் இது தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments