Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னித் தன்மை சோதனைக்கு எதிர்ப்பு : ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (10:17 IST)
மகாராஷ்டிரா மாநிலம் தானே  மாவட்டத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கஞ்சர்பாத் சமூகத்தினரிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்துவருகிறது. அதாவது 'திருமணத்துக்கு முன்பு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் பழக்கமே அது'.
ஆனால் இந்த வழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சமூகத்தை சேந்த இளைஞர்கள் ஆன்லைனில் பிரச்சார செய்துவருகின்றனர்.
 
இந்நிலையில் கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு குடும்பம் அவர்கள் வகுப்பிலிருந்து புறக்கணிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்த புகாரின் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அம்பர்நாத்த்இல் வசிக்கும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் இந்த கஞ்சர்பாத் வகுப்புஇல் உள்ள சாதி பஞ்சாயத்து தனது குடும்பத்தை கடந்த ஒரு ஆண்டு காலமாக ஊரை விட்டு ஒதுக்கிவைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த விவேக் தமாய்ச்சிகர் போலீஸில் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்