Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல்களை காசு கொடுக்காமல் ஏமாற்றிய ஓயோ! நிறுவனர் மீது வழக்குப்பதிவு

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (20:47 IST)
பிரபல ஆன்லை ஹோட்டல் புக்கிங் நிறுவனமான ஓயோ, தங்களது இணைப்பில் உள்ள ஹோட்டல்களை ஏமாற்றியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் உணவு வாங்க எப்படி ஸ்விகி, ஸொமாட்டோ பொன்றவை பிரபலமான அப்ளிகேசன்களோ, அதுபோல தங்கும் விடுதிகளில் ஆன்லைனில் புக் செய்ய பிரபலமான அப்ளிகேசன் ஓயோ. இந்தியா முழுவதும் 2000க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள் ஓயோவுடன் இணைப்பில் உள்ளன.

இந்நிலையில் ஓயோ நிறுவனம் ஹோட்டல்களுக்கு உரிய கட்டணத்தை வழங்காமல் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ராஜ்குரு ஷெல்டர் ஹோட்டல்ஸ் உரிமையாளர் ஓயோ மீது காவல்த்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதில் ஓயோ நிறுவனம் கடந்த ஒரு வருடமாக தங்களை ஏமாற்றி வருவதாகவும், ஆன்லைனில் ரூம் புக் செய்வதால் கிடைக்கும் பணத்தில் வெறும் 20% மட்டுமே ஹோட்டலுக்கு அளித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது ஹோட்டல் தொழிலில் 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து ஓயோ நிறுவன தலைவர் ரித்திஷ் அகர்வால் மற்றும் அவரது தொழில் பங்குதாரர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற அப்ளிகேசன்களால் தாங்கள் நஷ்டமடைவதாக உணவகங்கள் வெளியேறியிருக்கும் நிலையில், தற்போது ஹோட்டல், தங்கும் விடுதிகள் புக் செய்யும் ஓயோ நிறுவனமும் இது போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments