Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய பாலகோட்டில் மீண்டும் பயங்கரவாதிகள் !

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (18:54 IST)
கடந்த பிப்ரவரி மாதத்தில் காஷ்மீரில் உள்ள புல்வாமா என்ற பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இந்திய  விமானப்படையினர், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் சமீபத்தில் காஷ்மீருக்கு இருந்து வந்த 370 சிறப்பு அந்தஸ்து மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகளை மோடி அரசு நீக்கி உத்தரவிட்டது.  இதனால் பாகிஸ்தான் அரசு கோபம் கொண்டுள்ளது. பல்வேறு உலகநாடுகளுக்கு பாகிஸ்தாம் பிரதமர் கோரிக்கை விடுத்தும் அவரது பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் பிரதமர் மோடியில் கை உலக அரங்கில் ஓங்கியுள்ளது.
 
இந்நிலையில், நம் விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்த, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் - இ - முஹம்மது என்ற பயிற்சி மையத்தில்,தீவிரவாதிகள்  சுமார்   50 பேர் வரை தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
 
பாகிஸ்தானில் தூண்டுகோளில் பேரில் இந்த பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments