Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை விரட்ட பாரசிட்டமல்... ஜெகன் மோகன் ரெட்டி அட்ராசிட்டி!!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (16:40 IST)
கொரோனோ வைரஸ் பாதிப்பை சரி செய்ய பாரசிட்டமல் போதுமானது என அலட்டாமல் தெரிவித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. 
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
 
இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனோ வைரஸ் பாதிப்பை  சரிசெய்ய பாரசிட்டமல் மாத்திரைகள் போதுமானது என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 
 
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனா குறித்து பேசியதாவது, கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே யாரும் அஞ்சி நடுங்கத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனோ பாதிப்பு ஏற்படும். கொரோனோ வைரஸ் பாதிப்பை சரி செய்ய பாரசிட்டமல் போதுமானது என அலட்டாமல் தெரிவித்துள்ளார். 
 
ஆந்திராவில் நடக்க வேண்டியிருந்த உள்ளாட்சி தேர்தல் கொரோனோ வைரஸ் தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments