Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசைவம் தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரம்! எங்கே இருக்கிறது தெரியுமா?

Prasanth Karthick
திங்கள், 15 ஜூலை 2024 (11:27 IST)

உலகிலேயே முதல்முறையாக அசைவம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நகரமாக இந்தியாவின் ஒரு நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மதத்தினரும் வசித்து வரும் நிலையில் பொதுவாக அனைத்து நகரங்களிலுமே சைவ, அசைவ உணவுகள் என்பது பொதுவானதாக இருந்து வருகிறது. ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இடையே அசைவ உணவுகள் குறித்த ஒவ்வாமை பல காலமாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் குஜராத்தில் உள்ள பாலிதானா என்ற நகரம் முழுவதும் அசைவம் தடை செய்யப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள இந்த பாலிதானா நகரம் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் பகுதியாக உள்ளது. பொதுவாகவே அசைவ உணவுகள், பூமிக்கு கீழே விளைந்த கிழங்கு வகைகளை ஜெயின்கள் தங்கள் உணவுகளில் எடுத்துக் கொள்வதில்லை. மேலும் மகாவீரர் ஜெயந்தி அன்று பல பகுதிகளிலும் இறைச்சி கடைகள் மூடப்படுவதையும் பார்க்க முடியும்.

பாலிதானா நகரில் 250க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் அவற்றை மூட வேண்டும் என 200க்கும் மேற்பட்ட ஜெயின துறவிகள் குரல் எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது அசைவம் முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரமாக பாலிதானா மாறியுள்ளது. அதை தொடர்ந்து குஜராத்தின் வததோரா, ராஜ்கோட், ஜூனாகத் உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் இதேபோன்ற விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments