Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து - 18 பேர் பலி

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (10:48 IST)
ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் படகு சவாரி செய்த போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.


 

 
ஆந்திராவில் விஜயவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்திற்கு நேற்று சிலர் கிருஷ்ணா நதி வழியாக சுற்றுலா பயணிகள் சென்றனர். அப்போது, படகில் 38 பேருக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிகிறது.  இதனால், பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. யாரும் உயிர் காக்கும் கவசத்தை அணியவில்லை. இதனால் பலரும் நீரில் மூழ்கினர். 
 
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் 20 பேரை உயிருடன் மீட்டனர்.  ஆனால், 18 பேர் பலியாகிவிட்டனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.


 

 
மொத்தம் 8 குடும்பத்தை சேர்ந்த நபர்கள், அந்த படகை வாடகைக்கு எடுத்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments