Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? – முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (08:41 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

மற்ற மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவதை அவசியம் ஆக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் மேலும் சில முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments