Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்.. தேர்தல் எப்போது?

Siva
செவ்வாய், 14 மே 2024 (07:35 IST)
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நான்காவது கட்ட தேர்தல் நடைபெற்றது என்பது ஆந்திரா உள்பட ஒரு சில பகுதிகளில் சில வன்முறை நிகழ்வுகளும் நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்னும் மூன்று கட்ட தேர்தலே மீதம் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இன்று வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் இதனை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

வாரணாசி தொகுதியில்  இன்று பிரதமர் மோடி செல்லும் ரோட்ஷோ நடத்த இருப்பதாகவும் முடிந்தவுடன் அதன் பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே இரண்டு முறை வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்ட நிலையில் இது அவர் போட்டியிடுவது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments