Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (10:09 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்று தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் முன்பு இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகின்றன. தினசரி பாதிப்புகள் 2 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் பகுதி நேர மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி மாலை 6 மணியளவில் முன்னணி மருந்து நிறுவனங்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடு முழுவதும் மருத்துவம், மருந்துகள் மற்றும் தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மருந்து உற்பத்தியை அதிகரித்தல் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments