Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! – பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (08:43 IST)
இன்று இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

தியாக திருநாள் என்று அழைக்கப்படும் இந்த நாள் ”ஈத் அல் அதா” என்றும் அழைக்கப்படுகிறது. இன்று பக்ரீத் பெருநாளில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி “ஈத் முபாரக். ஈத் அல் அதா வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று கூறியுள்ளார். பக்ரீத் பண்டிகையில் மேலும் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments