Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கிங் போன போது கையில் வைத்திருந்தது என்ன? மோடி உடைத்த சீக்ரெட்!

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (11:43 IST)
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை கடற்கரையில் வாக்கின் சென்ற போது கையில் வைத்திருந்தது என்னவென தகவல் வெளியிட்டுள்ளார். 

 
இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திபிற்காக கோவலத்தில் தங்கியிருந்த மோடி நேற்று அதிகாலை கடற்கரையில் கால்களில் செருப்பு அணியாமல் நடைபயிற்சி மேற்கொண்டார். 
 
அப்போது கடற்கரை மணலில் இருந்த குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுப்பட்டார். மோடி வாக்கிங் சென்ற போதும், தூய்மை பணியில் ஈடுபட்ட போதும் கையில் ஒரு பொருளை வைத்திருந்தார். அந்த பொருள் என்னவென பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
 
இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் மோடி. இது குறித்து மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, நேற்றிலிருந்து பலரும் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு வருகின்றனர். அது நான் நடைபெயிற்சியின் போது கையில் வைத்திருந்தது என்ன என்பதுதான். அந்த கருவியின் பெயர் அக்குபிரஷர் ரோலர். இது என்னக்கு எப்போதும் உபயோகமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments