Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனை அடித்து, இளம் பெண்ணுடன் உல்லாசம் கண்ட போலீஸ்!!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:01 IST)
ராய்ப்பூரில் விதான் சபா பகுதியில் காதலனை அடித்து இளம் பெண்ணை போலீஸார் கற்பழித்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராய்ப்பூரில் உள்ள விதான் சபா பகுதியில், 20 வயது இளம்பெண் தன் காதலனுடன் மறைவிடத்தில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட போலீஸார் இருவரையும் அழைத்து சென்று மிரட்டியுள்ளனர்.
 
மேலும், அந்த பெண்ணின் காதலரை அடித்து உதைத்துள்ளனர். இருவரையும் மிரட்டி ரூ.15,000 பறித்தனர். அதோடு நிறுத்தாமல், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று கற்பழித்துள்ளனர்.
 
ஹீராலால் நிர்மல்கர், திகாராம் தாரக் ஆகியோர்தான் அந்த காவல் அதிகாரிகள் என கூறப்பட்டுள்ளது. போலீஸ்காரர் ஹீராலால் செல்போன் மூலம் பெண்ணிடம் மேலும் ரூ.5,000 கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.
 
தொல்லை தாங்க முடியாத பெண், போலீஸ்காரரின் பேச்சை செல்போனில் பதிவு செய்து அதை ஆதாரமாக வைத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து 2 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments