Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசோதா நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிப்பதா? உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி..!

Mahendran
வியாழன், 15 மே 2025 (11:09 IST)
தமிழக அரசு கொண்டு வந்த சில மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் அதை கிடப்பில் வைத்திருந்ததை எதிர்த்து, மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “ஆளுநர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பும் மசோதாக்கள் மீது அவர் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் முடிவு இல்லை என்றால், மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்” என தெரிவித்தனர்.
 
இதன் மூலம், முதல் முறையாக ஜனாதிபதியின் முடிவுக்கு நேரக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, “உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு நேரம் குறிக்கலாமா?” என்ற விவாதம் எழுந்துள்ளது.
 
இந்நிலையில், ஆளுநர்களால் அனுப்பப்படும் மசோதாக்களில் ஜனாதிபதி மூன்று மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தெளிவுபடுத்துமாறு, ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகலாம்.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

காஸா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்.. 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன்.. ரூ.8,700 கோடி விடுவித்த சா்வதேச நிதியம்

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. லாபத்தை அதிகளவில் புக் செய்கிறார்களா?

இன்று ஒரே நாளில் 1500 ரூபாய்க்கு மேல் குறைந்த தங்கம்.. நகைப்பிரியர்கள் குஷி..!

அடுத்த கட்டுரையில்
Show comments