Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்! பற்றி எரியும் மணிப்பூர்! - அமித்ஷா எடுக்க போகும் நடவடிக்கை என்ன?

Prasanth Karthick
திங்கள், 18 நவம்பர் 2024 (10:30 IST)

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்திடையே ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

 

மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதனால் மணிப்பூர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அடுத்தடுத்து இரு பிரிவினர் இடையே எழும் மோதல்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

 

சமீபத்தில் குக்கி பழங்குடியின பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து குக்கி சமூக மக்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், தடுக்க வந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம்களிலும் தாக்குதல் நடத்தினர்.
 

ALSO READ: தமிழுக்கு பதிலாக பிரெஞ்ச் மொழி படிக்கிறேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் பேட்டி..!
 

அதன்பின்னர் மெய்தி பிரிவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மாயமான நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அதை தொடர்ந்து இரு பிரிவினர் இடையேயான மோதல் தீவிரமடைந்ததுடன், மணிப்பூர் முதலமைச்சர், எம்.எல்.ஏக்கள் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

 

தொடர்ந்து மணிப்பூரில் வன்முறை தீவிரமடைந்து வருவதால் மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அமித்ஷா, அதை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து டெல்லி திரும்பியுள்ளார். தொடர்ந்து அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளுடன் அமித்ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கலவரத்தை கட்டுப்படுத்த அமித்ஷா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments