Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மணி நேரத்தில் 6 கொலைகள்; சைக்கோ கில்லரின் கைவரிசை...

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (14:39 IST)
ஹரியானாவில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மணி நேரத்தில் 6 பேரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்வால் நகரில் இன்று காலை 4 மணி அளவில் வெவ்வேறு இடங்களில் 6 பேர் இரும்புக்கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துகிடந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து, அதிரடியான நடவடிக்கை எடுத்த போலீஸார் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை கொண்டு கொலையாளியை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவனை ஆதர்ஷ் நகரில் கைது செய்துள்ளனர்.
 
போலீஸார் அவனை கைது செய்த போது அந்த நபர் போலீஸாரையும் தாக்க முற்பட்டுள்ளான். பின்னர் நடைபெற்ற விசாரணையில், கொலையாளி முன்னாள் ராணுவ வீரர் என்றும் அவரது பெயர் நரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
கைது செய்யப்பட்ட நரேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments