Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆயிரம் பேரை அடைக்க சிறை தயார்! – பஞ்சாப் ஆணையர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (13:45 IST)
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் பஞ்சாப்பில் சிறப்பு சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் சிறப்பு மருத்துவமனைகள் அமைத்தல், ரயில்பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதேசமயம் ஊரடங்கை பின்பற்றாமல் மக்கள் பலர் சாலைகளில் திரிவதும் பிரச்சினையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் 6 ஆயிரம் கைதிகளை அடைக்கும் வகையில் நான்கு சிறப்பு சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக பஞ்சாப் காவல் ஆணையர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அவர்களை சிறையில் அடைக்கவே இந்த சிறப்பு சிறைச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments