Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வரி விதிப்பு; பஞ்சாப் அரசு அதிரடி

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (12:04 IST)
ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.


 

 
இந்தியாவில் வரி விதிப்பு அதிக அளவில் இருப்பதால் நாட்டு மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறுத்து பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 
 
ஆடு, நாய், பூனை, பன்றி, மான் வளர்பவர்கள் ஆண்டுக்கு ரூ.250 வரி செலுத்த வேண்டும். எருமை மாடுகள், காளை மாடுகள், ஒட்டகம், குதிரை, பசுமாடு, யானை வைத்திருப்பபவர்கள் ஆண்டுக்கு ரூ.500 வரி செலுத்த வேண்டும். மேலும் பிராணிகளை வணிக குறியீடு செய்து, அதன் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்படும்.
 
இவ்வாறு பஞ்சாப் மாநில அரசு வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு விதிக்கப்படும் வரி குறித்து தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பஞ்சாப் மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பு பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments