Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு: ராகுல்காந்திக்கு தலைவர்கள் பாராட்டு

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (11:33 IST)
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, 'ராஜீவ் கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டதாகவும், பிரபாகரனுக்காகவும் அவருடைய குழந்தைகளுக்காகவும் தான் வருந்தியதாகவும் தெரிவித்தார். ராகுல்காந்தியின் இந்த திடீர் மாற்றம் அரசியல் கட்சி தலைவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அவரை இதுவரை விமர்சனம் செய்தவர்கள் கூட இந்த கருத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருக்கும் கருத்தை வரவேற்கிறேன் ராகுல் கருத்து சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய உதவும் என நம்புகிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

ராகுல்காந்தியின் இந்த கருத்தை அடுத்து சட்டத்தில் வழிவகை இருந்தால் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம் என்றும் 7 பேர் விடுதலை தொடர்பாக நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments