Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறே மாதத்தில்... மோடிக்கு சவால் விட்ட ராகுல்!!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (15:48 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் அமேதிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.


 
 
அவரது தொகுதியில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என்று மக்களோடும் நேரடியாக உரையாடிவருகிறார் ராகுல் காந்தி. 
 
நேற்று நடந்த பேரணி ஒன்றில், மோடிக்கு எதிராக சவால் விடுத்துள்ளார். பேரணியில் ராகுல் காந்தி பின்வருமாறு கூறியுள்ளார். 
 
”நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது மட்டுமல்ல, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களின் பிரச்சினை பற்றியும் பிரதமர் மோடி கவலைப்படவில்லை. 
 
விவசாயம் நலிவடைந்துவிட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. விவசாயிகள், இளைஞர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்பதை மோடி அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். 
 
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஆறே மாதங்களில் விவசாயிகள், இளைஞர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மோடிக்கு சவால் விடுத்துள்ளார் ராகுல் காந்தி.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments