Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் சொன்னது ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று? ப.சிதம்பரம் டிவிஸ்ட்!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (18:44 IST)
2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடளுமன்ற தேர்தல்இல் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என யார் சொன்னது என கேட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிஸ்ட் வைத்துள்ளார். 
 
முன்னதாக ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வென்றால், கூட்டணிக் கட்சிகள் என்னைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்தால், நான் பதவி ஏற்கத் தயார் என்று கூறி இருந்தார்.
 
இந்நிலையில் ப.சிதம்பரம், 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் கட்சி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
 
காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும். அந்த இடத்தில் மாற்று அரசாக, முற்போக்கு அரசு அமர வேண்டும். 
 
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமர் பதவி என்பது ஒரு பொருட்டு அல்ல. காங்கிரஸ் கட்சி, எங்கள் கட்சியில் இருந்து பிரதமர் வர வேண்டும் என்றும் கூறவில்லை. எங்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், எங்களின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments