Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரசேகர ராவை தோற்கடித்துவிட்டால் மோடியை தோற்கடித்துவிடலாம்: ராகுல் காந்தி

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (08:22 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவை தோற்கடித்து விட்டால் டெல்லியில் மோடியை தோற்கடித்து விடலாம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
தெலுங்கானா மாநிலத்தில்  நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி நேற்று செய்தார். அப்போது அவர் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது எனக்கு மிகுந்த அன்பு கிடைத்தது. நான் மோடியை எதிர்த்து போராடுவதால் என்னை மக்கள் ஆதரிக்கின்றனர். 
 
என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நான் எனது போராட்டத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். 
 
சந்திரசேகர் ராவ் கட்சி தான் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.  தெலுங்கானாவில் அவருடைய ஆட்சியை அகற்றி விட்டால் மத்தியிலும் மோடி அரசு அகற்றப்படுவது எளிது என்று அவர் பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

சைபர் தாக்குதலால் ஏடிஎம், வங்கி சேவை பாதிப்பா? முன்னணி வங்கிகள் விளக்கம்..!

24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments