Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் விவசாயி மகன்தான்; எனக்கும் விவசாயம் தெரியும்! – எடப்பாடியார் ஸ்டைலில் ராஜ்நாத்சிங்!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:07 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சிகள் பேசி வரும் நிலையில் தானும் விவசாயம் செய்தவன் என்றும், விவசாயம் குறித்து தெரியும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தொடர்ந்து வேளாண் சட்டங்களை விமர்சித்து வருகின்றன. முக்கியமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மத்திய அரசு மீது காட்டமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் “ராகுல்காந்தியை விட விவசாயம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். வேளாண் சட்டங்கள் மக்களுக்கு நன்மையை அளிக்க கூடியவை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments