Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெகாசஸ், பிபிசி ஆவணப்படம், மணிப்பூர்.. பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியாகும் பிரச்சனைகள்: சதிக்கு பின் யார்?

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:40 IST)
ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் அல்லது பாராளுமன்றம் கூடும் நாள் ஓர் பிரச்சனை வெளியாகி கொண்டிருப்பது ஏன் என பாஜக பிரமுகர்  ராம சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பெகாசஸ் என்ற டெலிபோன் ஒட்டு கேட்கும் பிரச்சனை பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் தான் வெளியானது. அதேபோல் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படமும் பாராளுமன்றத்திற்கு கூட்டத்திற்கு முந்தைய நாள் தான் வெளியானது 
 
அதேபோல் தற்போது பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் தான்  மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த அநியாயம் குறித்து வெளியானது. மே 4ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தை பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? ஏன் இதுவரை அந்த வீடியோ வெளியேறவில்லை?
 
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரே இதுவரை போலீஸில் சென்று ஒரு புகார் கூட கொடுக்காமல் மிகச் சரியாக பாராளுமன்றத்திற்கு முந்தைய நாள் பேட்டியளிப்பது ஏன்? இது குறித்து விசாரிக்க வேண்டும் 
 
இதில் அயல்நாட்டு சதியும் இருக்கிறது, பாராளுமன்றத்தை ஒரு பிரச்சனையின் மூலம் முடக்க வேண்டும் என்ற சதியும் இருக்கிறது என்று ராம சீனிவாசன் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments