Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் திடீர் அதிகரிப்பு! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (10:58 IST)
வங்கிகளில் பெறப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் பல்வேறு வகையான தேவைகளுக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது உலகளாவிய சூழலில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதால் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5% உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9% ஆக இருந்த நிலையில் அது 5.4% ஆக உயர்ந்துள்ளது.

வங்கிகளின் ரெப்போ வட்டி விகித உயர்வால் வீடு, கார், தொழில் கடன்களுக்கு வங்கியில் வட்டி உயரும் அபாயம் உள்ளதாக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments