Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க எந்த நிலத்தையும் வாங்கல.. விவசாயமும் பண்ணல! – டவர் தாக்குதலால் அறிக்கை விட்ட ரிலையன்ஸ்!

National
Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (13:17 IST)
பஞ்சாபில் ரிலையன்ஸ் டவர்கள் தாக்கப்பட்ட நிலையில் தங்கள் நிறுவனம் நேரடி விவசாயத்தில் ஈடுபடவில்லை என ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானாவிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த வேளாண் சட்டங்களால் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்க உள்ளதாகவும், இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடி கொள்முதல், விவசாயம் உள்ளிட்டவற்றில் ஈடுபட போவதாகவும் விவசாயிகளிடையே தகவல்கள் பரவியதால் கார்ப்பரேட் நிறுவன பொருட்களை சேதப்படுத்தி வருகின்றனர்.

பஞ்சாபில் 1500க்கும் மேற்பட்ட ஜியோ செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ‘ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் முகவர்கள் மூலமாக மட்டுமே உணவு பொருட்களை வாங்குவதாகவும், நேரடி கொள்முதல் செய்யவில்லை என்றும், நேரடி விவசாயம் செய்யும் எண்ணம் ரிலையன்ஸ்க்கு தற்போதும், எதிர்காலத்திலும் என்றும் இருந்ததில்லை என்றும், விவசாயத்திற்காக ரிலையன்ஸ் நிலம் வாங்கியதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments