Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10% இட ஒதுக்கீடு மசோதா: மக்களவையை அடுத்து மாநிலங்களவையில் இன்று தாக்கல்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (07:58 IST)
பொருளாதார நிலையில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கோரும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்த நிலையில் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக  323 வாக்குகள் விழுந்ததால் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவை எதிர்க்கும் திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளுக்கு மக்களவையில் உறுப்பினர்களே இல்லாததால் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை

இந்த நிலையில் 10% இட ஒதுக்கீட்டிற்கான மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் மாயாவதி உள்ளிட்ட ஒருசில கட்சிகள் இந்த மசோதாவை வரவேற்றுள்ளது. எனவே திமுக உள்ளிட்ட உறுப்ப்பினரகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இன்றும் மாநிலங்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments