Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் வங்கிக்கு கெடு விதித்த ரிசர்வ் வங்கி!

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (15:27 IST)
நீரவ் மோடி நிறுவனத்தின் வெளிநாட்டு வைர இறக்குமதிகளுக்கான பணத்தை வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தருமென பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணியாளர்கள் சிலர் போலியான உறுதியளிப்பு கடிதம் அளித்ததாக தெரிகிறது. 

இதை நம்பி இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகள் கோடிக்கணக்கான டாலரை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடனாக கொடுத்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்கில் குவிந்த இந்த பணம் வெளிநாடுகளுக்கு கைமாறி இருக்கிறது. 
 
இதன் மூலம் ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் மோசடி விளைவுகளுக்கு வங்கிதான் பொறுப்பு என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாம்.
 
மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 30 வங்கிகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,300 கோடியை அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதை செய்ய தவறினால் வங்கி துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும், நிதி சந்தையில் குழப்பம் ஏற்படும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments