Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஐ புதிய இயக்குனர் யார்? பிரதமர் தலைமையிலான குழு அறிவிப்பு

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (17:35 IST)
கடந்த ஒரு மாதமாக சிபிஐ இயக்குனர் பதவியை பிரதமர் தலைமையிலான குழுவும், நீதிமன்றமும் பந்தாடி வந்த நிலையில் சிபிஐக்கு புதிய இயக்குனர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷி கே.சுக்லா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் தலைமையிலான குழு அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது.

சிபிஐ அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிஷி கே.சுக்லா மத்திய பிரதேசத்தில் டிஜிபி.யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ அமைப்பிற்கு புதிய நிரந்தர தலைவர் நியமனம் செய்யப்பட்டுவிட்டதால் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனர் பொறுப்பிலிருந்து நாகேஷ்வர் ராவ் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments