Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

Siva
வியாழன், 9 ஜனவரி 2025 (17:47 IST)
திரையரங்கில் கூட்டம் நெரிசலால் ஒரு பெண் உயிரிழந்த போது அல்லு அர்ஜுனை ஆந்திர அரசு கைது செய்தது போல், திருப்பதி நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஆந்திர அமைச்சர் ரோஜா விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதியில் கூட்டம் நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் ரோஜா பேசியபோது, புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்தது போல், திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த விஷயத்திற்கு சந்திரபாபு நாயுடு மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். திருப்பதியில் லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்கள், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா, அல்லது சந்திரபாபு நாயுடுடன் சேர்ந்து அவரும் ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பிரதமர் மோடிக்கு தான் ஒரு கோரிக்கை வைப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ரோஜா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments