Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4 கோடி, விரும்பும் இடத்தில் அரசு வேலை: ரவிகுமார் தாஹியாவுக்கு குவியும் பரிசு

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (07:16 IST)
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீரர் ரவிக்குமார் தாகியா அவர்களுக்கு பரிசுகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் ரஷ்ய வீரருடன் மோதிய இந்தியாவின் ரவிக்குமார் தாகியா தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் இரண்டாவது இடத்தை பெற்றதை அடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதனை அடுத்து இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரவிக்குமார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்மாநில அரசு அவருக்கு ரூபாய் நான்கு கோடி பரிசு அளித்து உள்ளது. அது மட்டுமின்றி அரசு பணிகளில் அவர் விரும்பும் இடத்தில் விரும்பும் பணியை கொடுக்கவும் உத்தரவிட்டு உள்ளது. இதனை அடுத்து ரவிக்குமாருக்கு பரிசுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்ற்தை அடுத்து ஹாக்கி அணியில் உள்ள ஹரியானா வீரர்களுக்கு ரூபாய் 2.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அரியானா மாநில அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பஞ்சாப் மாநில அரசு பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments