Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசன நேரம் நீடிப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (13:41 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி வருவார்கள் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இதுவரை இரவு 10 மணி வரை மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 11. 30 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது 
 
மேலும் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டு வருவதால் 10 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுவதால் தரிசன நேரம் நீட்டிப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments