Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினர்களை தாக்கினால் வீடு புகுந்து, கண்கள் நோண்டப்படும்: சரோஜ் பாண்டே எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (15:08 IST)
சமீபத்தில் கேரளாவில் பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தாக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வருவதால் மத்தியில் ஆளும் பாஜக கடும் ஆத்திரத்தில் உள்ளது என்பது அதன் நிர்வாகிகளின் எச்சரிக்கையில் இருந்து தெரியவருகிறது



 
 
பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட மத்திய அமைச்சர்களும், பாஜக நிர்வாகிகளும் கேரள அரசையும் இடதுசாரிகளையும் எச்சரித்து வரும் நிலையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே கூறிய சர்ச்சைக்குரிய ஒரு கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ((Durg)) மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சரோஜ் பாண்டே பேசியபோது, 'பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த யாராவது கண்வைத்தால், அவர்களது வீடு புகுந்து, கண்கள் நோண்டப்படும் என்று எச்சரித்தார். மேலும் மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் எந்த மாநில அரசையும் கலைக்கும் அதிகாரம் பாஜகவுக்கு இருப்பதாகவும், ஆனாலும் ஜனநாயக முறையில் நடந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சரோஜ் பாண்டேவின் சர்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments