Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைப்பா? – சர்ச்சைக்கு சத்யபிரதா சாகு விளக்கம்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (13:23 IST)
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. கொரோனா காரணமாக தேர்தல் தேதி ஒத்திவைக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “கொரோனா காரணமாக தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments