Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்த மேனேஜர்; விடுமுறை கொடுக்காத நிர்வாகம்! – பரிதாபமாக பலியான சோகம்!

Andhra Pradesh
Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:37 IST)
ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு விடுமுறை அளிக்கப்படாததால் முறையான சிகிச்சை இன்றி அவர் இறந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் பிட்டா ராஜேஷ். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவருக்கு விடுமுறை அளிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் உடல்நிலை மோசமானதால் கொரோனா சோதனை மேற்கொண்ட பிட்டா ராஜேஷுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தனது கொரோனா பாஸிட்டிவ் சான்றிதழை உயர் அதிகாரிகளுக்கு நகல் அனுப்பி விடுமுறை கேட்டுள்ளார். பிறகு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கொரோன பாதிப்பு அதிகமானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்புக்கு காரணம் உரிய நேரத்தில் விடுப்பு வழங்காத வங்கி மேலதிகாரிகளே என கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிட்டா ராஜேஷ் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments