Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (11:25 IST)
மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில் சாலையோர தடுப்பில் லாரி மோதியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரிகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் போதிலும், மக்கள் பலர் சட்டத்தை மதிக்காமல் லாரிகளில் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு, சிலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
 
இந்நிலையில் கட்டிட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் சதாரா - புனே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மினிலாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ஈடிபாடுகளில் சிக்கிய 15 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments