Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும்: அறக்கட்டளை திடீர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:49 IST)
ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என அறக்கட்டளை நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் மிகவும் பிரபலம் என்பதும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஷீரடி சாய்பாபா கோவிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனை கண்டித்து மே ஒன்றாம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என கோவில் அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் திரளாக பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மத்திய பாதுகாப்பு தொழில் படையினரால் பக்தர்களை சரியாக கையாள முடியாது என அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments