Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014 தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவில் மோசடி! அமெரிக்க நிபுணர் அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (20:48 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் பெரும் மோசடி நடந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணர் சையது சுஜா என்பவர் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் மூலம் மோசடி செய்யப்பட்டதாகவும், இந்த மோசடிக்கு இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று உதவியதாகவும், இதனை தன்னால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மின்னணு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதால் காங்கிரஸ் 201 இடங்களில் தோல்வி அடைந்ததாகவும், நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை கடுமையாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், கடுமையான மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள்படியே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த புகாரை தெரிவித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments