Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது பேச்சுக்கு மதிப்பில்லை: சித்தராமையா குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (10:58 IST)
கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் தனது பேச்சுக்கு மதிப்பில்லை என்று கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கர்நாடாகாவில் கங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகள் படுதோல்வி அடைந்ததால், கூட்டணி கட்சித் தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, கூட்டணி அரசின் மீது முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தனது அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். நேற்று கர்நாடகாவின் விஜயாபுரா மாவட்டத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், “ கூட்டணி ஆட்சியில் எல்லாமே சரியாக நடக்கிறது என்று சொல்ல முடியாது. ஒரு சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. மக்களும் பல பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறார்கள்’ என்று சித்தராமையா கூறினார்.

மேலும் அவர், ”தற்போது மக்கள் பிரச்சனையில் முடிவு எடுக்கவோ, அதனை தீர்க்கவோ நான் முதலமைச்சர் அல்ல, வெறும் கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்புத் தலைவர் மட்டுமே, அதனால் நான் சொல்வதை யாரும் கேக்கமாட்டார்கள். என்னுடைய பேச்சுக்கெல்லாம் அங்கு மதிப்பில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு கூட்டணி ஆட்சியில் தனது பேச்சுக்கு மதிப்பில்லை என்று சித்தராமையா கூறி இருப்பது கூட்டணி அரசில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் தான் முதலமைச்சராக இருந்த போது புதிதாக சில தாலுகாக்கள் உருவாக்கப்பட்டது என்றும், அவ்வாறு உருவாக்கப்பட்ட தாலுகாக்களுக்கு தற்போது வரை அலுவலக ஊழியர்களை நியமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments