Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (09:59 IST)
இந்தியாவில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு வியன்னாவிலிருந்து வந்த ஒருவருக்கும், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்குக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வியன்னாவிலிருந்து வந்த நபர் பயணித்த விமானத்தில் வந்த மற்ற பயணிகள் மற்றும் சிப்பந்திகள் வெளியாட்கள் யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வியன்னாவிலிருந்து டெல்லி வந்த நபரோடு தொடர்பில் இருந்த ஆறு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் ஆறு பேரும் ஆக்ராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக நொய்டாவில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி கொரோனா குறித்த முன்னெச்சரிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments