Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டம்: மத்திய அரசை மீறி மாநில அரசு செயல்பட முடியாது!!

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (18:29 IST)
குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என எந்த மாநில அரசும் கூற முடியாது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு 300 எம்பிக்களுக்கு மேல் ஆதரவும் 80 எம்பிக்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. 
 
மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா நிறைவேறி விடும் என்றே கணிக்கப்பட்டது. 
 
அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிர்த்து 92 வாக்குகள் பதிவானது. இதனை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து பலர் போர்கொடி தூக்கியுள்ளனர். 
 
இந்நிலையில், குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பட்டியலில் இருந்தால் மட்டுமே அதில் இருந்து விலக்குப் பெற மாநில அரசுகளால் முடியும். இந்த விவகாரத்தில் தனித்து முடிவெடுக்க மாநில அரசுகளால் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீக்கப்பட்ட அதே வீடியோ மீண்டும் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில்.. பெரும் பரபரப்பு..!

அன்னபூர்ணா சீனிவாசன் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!

வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!

புனித நகரங்கள், புனித தலங்களில் மது, இறைச்சிக்கு தடை.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments