Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொந்த தொகுதியில் பாஜவை ஜெயிக்க வைக்க முடியவில்லை...யோகியை விமர்சித்த சு.சுவாமி

சொந்த தொகுதியில் பாஜவை ஜெயிக்க வைக்க முடியவில்லை...யோகியை விமர்சித்த சு.சுவாமி
, வியாழன், 15 மார்ச் 2018 (15:21 IST)
தங்களது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்சியாக 5 முறை வெற்றி பெற்ற தொகுதியிலும் பாஜக தோல்வி அடைந்தது. வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் பாஜக தோல்விக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
தங்களது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு அமைச்சர்கள் பதவி கொடுப்பது பற்றி பாஜக ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில மாதங்களுக்கு மட்டுமே இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: தினகரன் கூறியது ஏன்?