Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாதம் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்படுவதில் வருத்தம்! – உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:38 IST)
நாட்டில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் மீது போதிய விவாதம் நடத்தப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகளுக்கு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments