Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா கவர்னராக தமிழிசை நியமனம்..

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (12:05 IST)
தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கேரளா மாநிலத்தின் ஆளுநராக ஆரிப் முகமது, ஹிமாச்சல் பிரதேசம் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பகத் சிங் கோஷ்யாரி, மஹாராஷ்டிரா ஆளுநராகவும், கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் வகித்து வந்த மாநில பாஜக தலைவர் பதவி, டிசம்பர் மாதத்தோடு முடிவடைவதால், அதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு எம்.பி.கனிமொழி, டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments