Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜன்னல் வழியாக மாணவியை தூக்கி எறிந்த ஆசிரியை: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:09 IST)
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் ஒருவர் முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை முதல் தளத்தில் உள்ள வகுப்பிலிருந்து ஆசிரியை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தார்
 
 இந்த சம்பவத்தில் மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறியுள்ளனர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆசிரியையை கைது செய்து அவர் மீது கொலை கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். வகுப்பறையில் என்ன நடந்தது? ஏன் மாணவியை ஆசிரியை தூக்கி எறிந்தார்? என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments