Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (18:34 IST)
கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!
தெலுங்கானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உருவானதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த சிறுமியை வயல்வெளியில் தனிமைப்படுத்தி வைத்து இருந்த கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாணவியை ஊருக்குள் விட அந்த கிராமத்தினர் மறுத்துவிட்டனர். இதனையடுத்து அந்த மாணவிக்கு தனியாக வயல்வெளியில் ஒரு தற்காலிக குடிசை போட்டு அதில் தங்க வைத்தனர் 
 
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிறுமியை ஊருக்குள் விட மறுத்த கிராமத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை அதிகாரி உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
கொரோனா என்பது எதிர்பாராமல் ஏற்படும் தொற்று என்றும் அதற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொதுமக்களிடம் சுகாதார அதிகாரி அறிவுறுத்தினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments