Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் வாங்கினால் செருப்பால் அடியுங்கள் - முதல்வர் பேச்சால் சர்ச்சை

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (08:55 IST)
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் பொதுமக்கள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தெலுங்கானாவில் நடைபெற்ற சிங்கரேனி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்க தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றி பெற்றதையொட்டி நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ் “சிங்கரேனி நிலக்கரி அமைப்பில் உடல் தகுதி பெற அதிகாரிகள் லஞ்சம் பெற்று வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன் எப்படியோ.. இனிமேல் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் அவர்களை செருப்பால் அடியுங்கள். அரசு சம்பளம் கொடுக்கும் போது அவர்கள் ஏன் லஞ்சம் கேட்க வேண்டும்.  தொழிலாளர் பிரச்சனைகளில் சில தவறுகள் நடந்துவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் அப்படி நடக்காது” என அவர் பேசினார்.
 
அவரின் இந்த பேச்சு தெலுங்கானா மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரம் ஒரு முதல்வர் இப்படி பேசலாம என சர்ச்சையும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments