Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: அண்டை மாநில முதல்வர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (14:32 IST)
டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் 
 
தமிழகத்திலிருந்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரதமரிடம் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகரராவ் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் 
 
மாநில அரசுகளுக்கு மதிப்பளிக்காமல் நடத்தும் இந்த நிதி ஆயோக் கூட்டம் தேவை இல்லாதது என்றும் இந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்வதால் தெலுங்கானா மாநிலத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன?

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிப்பு.. பட்டுக்கோட்டை அருகே பயங்கர சம்பவம்..!

ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

டான்ஸ் ஆடிய மணப்பெண் மயங்கி விழுந்து பலி! - துக்க வீடான திருமண வீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments